Sunday, August 09, 2009

காவடிச் சிந்தின் கதை - ஆழ்வார் காவடி! முருகன் காவடி!

காவடி என்பது பெரும்பாலும் என் முருகப் பெருமானுக்கே உரியது! கண்ண பெருமானுக்கு இப்போது யாரும் காவடி எடுப்பதில்லை! மாறாக, கண்ணன் தான் ஆயர் குலப் பொண்ணுங்களுக்கு வலியப் போயி காவடி எடுப்பான்! :)

இரு ஆய்ச்சிகளின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு, அவர்களையே காவடியின் இரு பக்கங்கள் போல ஆக்கி, குடத்தின் மேல் ஏறிக் கூத்து ஆடுவான்! குடமாடு கூத்தன்-ன்னும் பேரும் வாங்கிக்குவான்!

காவடி ஆட்டத்துக்கு-ன்னே பாடப்படுவது காவடிச் சிந்து-ன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்!

பெரும்பாலும் பண்டைய நாட்களில் தல யாத்திரைக்கு எளிய கிராம மக்கள் நடந்து தான் போவாங்க! இன்னிக்கும் சில பேரு அப்படிப் பழனிப் பாத யாத்திரை, திருப்பதிப் பாத யாத்திரை-ன்னு போறாங்க!

அப்போ, வழியில் களைப்பு தெரியாம இருக்க பாடப்படும் வழிநடைச் சிந்து தான் காவடிச் சிந்து! கிராம மக்களே பாடுவதால், ரொம்ப கடினமான சொற் செட்டு எல்லாம் இல்லாமல் ரொம்பவும் லோக்கலா இருக்கும்!
ஆனால், இதன் துள்ளலும் பீட்டும், இந்தச் சிந்து வகைப் பாடல்களை, மக்களிடையே மிகவும் பிரபலம் ஆக்கியது! இதனால் இது கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியங்களிலும் தலை தூக்க ஆரம்பித்தது! இசைக் கச்சேரிகளிலும் நுழைந்து கொண்டது!

படிக்காதவங்க பாடும் பாட்டு, படிச்சவங்க கையில் சிக்கினா என்ன ஆகும்?
= அதே தான் காவடிச் சிந்துக்கும் ஆகியது! :)
அந்தப் பாட்டுக்கு-ன்னு ராகம் கூடப் போட்டு, ஒரு டெம்ப்ளேட் உருவாக்கிட்டாங்க!
செஞ்சுருட்டி இல்லீன்னா சிந்து ராகம்!
- இது இரண்டில் தான் காவடிப் பாட்டுக்கள் இப்போது பெரும்பாலும் பாடப் படுகின்றன!

ஆனா ராகம்-ன்னா என்னன்னே தெரியாமல், கிராமத்தில் போடும் மெட்டு இருக்கு பாருங்க! அந்தத் துள்ளலும் அனுபவமும் எந்த ராகத்திலும் வராது! சும்மா பாட்டைக் கேட்டாலே போதும்,
தையத் தையத் தக்கத், தையத் தையத் தக்கத்
தையத் தையத் தக்கத் தானா
-ன்னு கால்கள் தானாவே ஆடும்! :)


சின்ன வயசுல (மூனாங் கிளாஸ்-னு நினைக்கிறேன்) என்னைய திருப்பதிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காய்ங்க வூட்டுல!
விளையும் பயிர் தான் முளையிலேயே தெரியுமாமே! சரியான டகால்டி பார்ட்டின்னு அப்பவே என்னை முடிவு கட்டிட்டாங்களாம்! :-)

ஏன்னா....திருப்பதியில நான் அரோகரா அரோகரா-ன்னு கூவிக்கிட்டு இருந்தேனாம்!
வர்ற வழியில, திருத்தணியில் ஹால்ட்டு! அங்கிட்டு மக்கள் காவடி ஆடும் போது, நான் கோவிந்தா கோவிந்தா-ன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தேனாம்! :)
நான் கல்லூரி லெவலுக்கு வந்த பின்னும் கூட, இதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எங்க மறைந்த ஆயா!(பாட்டி)

நான் மட்டும் தான் இப்படி டகால்ட்டி பேர்வழின்னு நெனைக்கறீங்களா?
நம்மள விட ஒருத்தர் செம டகால்ட்டியா இருக்காரு! ஆனா அவரு ஒரு ஆழ்வாரும் கூட! :)

கழுகு மலை ஆலய முகப்பில், அப்போதைய ராகவன்! :)


சரீ...இந்தக் காவடிச் சிந்தை, தமிழ் இலக்கிய லெவலுக்கு முதலில் கொண்டாந்தது யாரு?
காவடிச் சிந்து-ன்னாலே அது அண்ணாமலை ரெட்டியார் தானே!

திருநெல்வேலி, சென்னிக்குளம் இவரு சொந்த ஊரு! சென்னிக்குளம் முருகன், கழுகுமலை முருகன் - இவிங்க ரெண்டு பேர் மேலேயும் இவரு போட்ட காவடிச் சிந்துப் பாட்டுக்கள் எக்கச்சக்கம்!
இன்னிக்கும் கச்சேரிகளில் காவடிச் சிந்து-ன்னா இவரு பாட்டு தான்! இத்தனைக்கும் இவரு வீட்டுல அத்தினி பேரும் தெலுங்கு பேசறவங்க! :)

அண்ணாமலை ரெட்டியாரைப் போல நிறைய பாடலீன்னாலும்,
* ஊத்துக்காடு வேங்கட கவி
* பாரதியார்
* பாபநாசம் சிவன்
- இவிங்க எல்லாம் கூட, கொஞ்சம் கொஞ்சம் பாடி இருக்காய்ங்க!

ஆனால் அண்ணாமலை ரெட்டியார் உட்பட, இத்தினி பேரும் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவங்க! அண்ணாமலை ரெட்டியாரின் காலம் 1865!
ஊத்துக்காடு அவருக்கு கொஞ்சம் முன்னாடி! பதினெட்டாம் நூற்றாண்டு!
அப்போ அதுக்கு முன்னாடி எல்லாம் காவடிச் சிந்து இல்லீயா? சும்மா இப்போ தோன்றியது தானா?


அட, காவடி என்பது முருக பக்தர்கள் காலம் காலமா எடுத்துக்கிட்டு வராங்களே? அப்படி இருக்க, காவடிச் சிந்து-ங்கிறதும் ரொம்ப நாளா இருக்கணுமே!
சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாடல் சொல்லப்பட்டிருக்கு! ஆனால் ஏனோ காவடி பற்றிய குறிப்பு சொல்லப்படவில்லை! நக்கீரரும் காவடி பற்றி ஒன்னுமே சொல்லவில்லை!

சரி சங்க காலம் வேணாம்! விடுவோம்! அருணகிரியாச்சும் காவடிப் பாட்டு போட்டு இருக்காரா? அட, எனக்குத் தெரிஞ்ச வரை, இது தாங்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு!

அருணகிரியார் கூட ஏனோ காவடிச் சிந்து மெட்டுக்களைத் திருப்புகழில் வைக்கவில்லை!
சந்தத்துக்குன்னே பொறந்த சொந்தக் கவி அவரு!
அவரு கூட காவடிச் சிந்தைப் பாடாதது, எனக்கு இன்னி வரை வியப்பிலும் வியப்பு தான்!

அப்போ யாரு தான் காவடிச் சிந்தைத் தமிழ் இலக்கியத்தில் மொதல்ல போட்டிருப்பாங்க-ன்னு நினைக்கறீங்க? = ஹிஹி! ஹைய்யோ என்னைய அடிக்க வராதீக! :)
ராபின்ஹூட் ஆழ்வார்-ன்னு நான் கலாட்டா பண்ணும், திருமங்கை ஆழ்வார் தான்,
இதை லேசு மாசா அறிமுகப் படுத்திட்டுப் போயிருக்காரு! கி.பி. 9-ஆம் நூற்றாண்டு!

என்னா? ஆச்சரியமா இருக்கா? வழக்கம் போல கேஆரெஸ் வைணவ டகால்ட்டி பண்ண ஆரம்பிச்சிட்டான்-ன்னு தோனுதா! ஹிஹி!
இது மாதவிப் பந்தல் இல்லை!
என் தோழனும் நானும் இருக்கும் "இனியது கேட்கின்" வலைப்பூ!
இன்னிக்கி-ன்னு பார்த்து இங்கே இந்தக் காவடிப் பதிவைப் போட வச்சதும் என் ஆசை முருகப் பெருமானே!

திருமங்கை ஆழ்வார் உண்மையான பேரு நீலன்! செம ஹாட் பார்ட்டி! :)
இவரு கையில் எப்பவும் ஒரு வேல் வேற வச்சிக்கிட்டுத் திரிவாரு! படத்தில் பாருங்க!

"வேல் ஏந்திய ஒருத்தர்" தான், வழிநடைச் சிந்து என்னும் காவடிச் சிந்து கிராமத்துப் பாடல்களை.....
தமிழ் இலக்கியத்துக்குள் முதலில் கொண்டு வந்து அறிமுகப்படுத்தணும்-ன்னு இருக்கு போல!

ஆனால் ஆளு 9-ஆம் நூற்றாண்டு இல்லையா? அதுனால அந்தக் காலத்து தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டாந்து, இவரோட வழிநடைச் சிந்தில் போடுறாரு!
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள "நந்திபுர விண்ணகரம்" என்ற திவ்ய தேசத்துக்கு போறாரு! அப்போ களைப்பு தெரியாம இருக்க, இப்படிப் பாடி-ஆடிக்கிட்டே போறாரு!
நீங்களே கேளுங்க! சூப்பர் கிராமிய மெட்டு! செம பீட்டு!
கேட்டுக்கிட்டே பதிவை மேல படிங்க!


Thiru_Nandipura_Vinnagaram.mp3 - Vazhi Nadai Chinthu!
OR (If you are not able to hear the above track of 00:01:48, fully on imeem,
Herez the esnips audio. There is a short intro. The song starts from 00:00:40)
Get this widget Track details eSnips Social DNA

தீதறு நிலத்தொடு, எரி-காலின் - ஓடு,
நீர்கெழு விசும்பும் அவையாய்,
மாசறு மனத்தினோடு உறக்கமொ(டு)
இறக்கை அவை-ஆய பெருமான்!

(நிலம்-நெருப்பு-கால்/காற்று-நீர்-ஆகாயம்-ன்னு ஐம்பூதங்களுமாய் இருக்கான்!
மாசில்லா மனத்தில் உறக்கம்/கனவு-ன்னு உறைந்து இருக்கான் பெருமான்!)


தாய் செற, உளைந்து, தயிர் உண்டு - குடம்
ஆடு தட மார்வர், தகை சேர்
நாதன் உறைகின்ற, நகர் நந்தி - புர
விண்ணகரம் நண்ணு மனமே! -
புர
விண்ணகரம் நண்ணு மனமே!


(தாய் கோவிச்சிக்க, ஓளிஞ்சி ஓடி, தயிர் குடிச்சி, குடத்தின் மேல் ஆடும் கூத்தன்!
தட மார்பு, தகை சேர்ந்த அவன் நாதன்! அவன் வாழும் இடம் நந்திபுர விண்ணகரம்! அதை அடை மனமே!)


தந்தை மனம் உந்த, துயர் நந்த - இருள்
வந்த விறல், நந்தன் மதலை!
எந்தையிவன் என்று, அமரர் கந்த - மலர்
கொண்டு தொழ நின்ற நகர்தான்!

(வசுதேவன் சிறையில் பயப்பட, துயர் படர, இருட்டில் கோகுலம் வந்து சேர்ந்த நந்தகோபனின் குழந்தை!
எங்கள் பெருமான் என்று எல்லாரும் கந்த மலர் தூவித் தொழுபவன் இவன்! இவன் ஊரு இது!)


மந்த முழவு ஓசை, மழையாக - எழு
கார் மயில்களாடும், பொழில் சூழ்,
நந்தி பணி செய்த, நகர் நந்தி - புர
விண்ணகரம் நண்ணு மனமே!
- புர
விண்ணகரம் நண்ணு மனமே!

(முழவு என்னும் மத்தள ஓசை தொடர்ந்து எழ, மயில்கள் பொழிலில் ஆட,
நந்திகேஸ்வரர் பெருமாளுக்குப் பணி செய்த நந்திபுர விண்ணகரம்! அதை அடை மனமே!)



என்ன மக்கா, ஆழ்வார் காவடிச் சிந்து பாடி இருப்பாரு என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தானே! எனக்கே ஆச்சரியம் தான்! :)
சரி, இப்போ என் ஆசை முருகன் மேல் உள்ள ஒரு காவடிச் சிந்தைப் பார்க்கலாமா? அண்ணாமலை ரெட்டியார் போட்டது தான்!
இதைப் பார்த்தா, காவடிச் சிந்து, எப்படி காலத்துக்கு ஏற்றாற் போல்,
லைட்டா உரு மாறி இருக்கு-ன்னு தெரிஞ்சீரும்!

அதே மூனு மூனு சீராப் பாடும் சந்தச் சீர்கள் தான்!
ஆனால் மூன்றாம் அடியில் மட்டும் மூனு சீராப் பாடாது,
வேகத்துக்காக இன்னும் கொஞ்சம் இழுக்கறாங்க! அதனால் பீட்டு இன்னும் கூடுது! "போடேய்"-ன்னு தாளத்தை இன்னும் கூட்டுது! கேட்டுக்கிட்டே படிங்க!

உன்னி கிருஷ்ணன் பாடுவது, இங்கே!
ஆனா பித்துக்குளி பாடி இருந்தா இன்னும் லோக்கலா நல்லாக் கும்மியிருப்பாரு! :)

சென்னிக்குள நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்-புனை
தீரன் அயில் வீரன்


வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்-வர
வாதே சொல்வன் மாதே


அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்-செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்


கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளில் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமே-கதி
காண்பார் இன்பம் பூண்பார்.



ரெண்டு சிந்தையும் கேட்டுட்டு, நீங்களும் கூடவே பாடிப் பாருங்கள்!
அப்போ தெரியும், கால்கள் தானே ஆடுகிறாதா என்று! :-)
காவடியா, உன்னடி கா அடியா? எம்மைக் கா அடியா! காக்கும் அடியா!அரகரோகரா!!
பதிவை முடிக்கும் போது அதே டகால்ட்டியோடு முடிக்கணும்-ல? :)
மேலே மலேசிய பத்து மலைக் காவடிய உத்துப் பாருங்க! என்னாத் தெரியுது?
அது எப்படிங்க தைப்பூசம் காவடி-ல நாமம், சங்கு, சக்கரம் எல்லாம் இருக்கும்? மலேசிய மக்கள் யாராச்சும் இந்த வழக்கம் பத்தி வந்து சொன்னீங்க-ன்னா புண்ணியமாப் போவும்! :)

நந்தி பணி செய்த, நகர் நந்தி புர
விண்ணகரம் நண்ணு மனமே!
கழுகு மலை முருகனுக்கு அரோகரா! அரோகரா!!

(குறிப்பு: அம்மா குருவாயூர் போயிட்டு, அங்கிருந்து இன்னிக்கி கழுகு மலை போயிருக்காங்க, என் சார்பாக, காவடி எடுக்க! அதான் இந்தச் சிறப்புப் பதிவு!)


References: இதர காவடிப் பதிவுகள்:

முருகனருள் வலைப்பூவில்:
தைப்பூசம்: குத்துப் பாட்டு=கிளிக் கண்ணி+காவடிச் சிந்து!
கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு
100ஆம் பதிவு! பதிவர்கள் எடுக்கும் ஆறுபடைக் காவடிச் சிந்து!
வள்ளியைத் தொட்டு - காவடிச் சிந்து
காவடி ஆட்டமா! - காவடிச் சிந்து பாட்டமா!

கண்ணன் பாட்டு வலைப்பூவில்:
முருகனுக்கு மட்டுமா? கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
கண்ணன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!

Wednesday, January 07, 2009

வை.ஏகாதசி: புதிரா? புனிதமா?? - தெய்வத் தமிழ் மொழி!

Jan-10, 2009 01:56 PM EST
முடிவுகள் அறிவிச்சாச்சே! :)
ஏகாதசியில் போட்ட புதிரை, ஆருத்ராவில் திறப்பதும், சாலப் பொருத்தமே! :)

வின்னர்கள்! புதிரா புனிதமா மன்னர்கள் இதோ!
1. ராகவ்
2. கெக்கேபிக்குணி
3. தியாகராஜன்
(அனானியார் முதல் பரிசைத் தட்டிச் செல்வது, இதுவே முதல் முறை-ன்னு நினைக்கிறேன்! வாழ்க வாழ்க! :))))

தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தர்கள்!
1. குமரன்
2. ஷோபா


விடைகள் கீழே BOLD செய்யப்பட்டுள்ளன!
விடைக்கான விளக்கங்கள், விடை காண விளக்கங்கள் = எல்லாவற்றையும் இரு பெரும் சிகரங்கள் செய்யப் போகின்றன!
* 1-5 மெது விடைகளைச் குமரன் சுடுவாரு! :)
* 6-10 மசால் விடைகளை ஜிரா சுடுவாரு! :)

வென்றவர்க்கும் நின்றவர்க்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!


மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீக? புதிரா புனிதமா குவிஜ் ஆடி கொஞ்சம் நாள் ஆயிருச்சா? பரவாயில்ல! வைகுண்ட ஏகாதசி அன்னிக்கி கண் முழிச்சி, ஏதாச்சும் ஆடணும்-ல? எத்தனை நாள் தான் பாம்பு-ஏணி விளையாட்டு வெளையாடிக்கிட்டு இருப்பீக? இந்த ஏகாதசிக்குப் "புதிரா? புனிதமா?" ஆடலாம் வாங்க! :)

அப்படியே தொடர் திருப்பாவைப் பதிவில் இருந்தும், ஜாலியா ஒரு விளையாட்டுக்கு ப்ரேக் அடிச்சா மாதிரியும் இருக்கும்! :)
இன்னிக்கி சிறப்புத் தலைப்பு! - தெய்வத் தமிழ் மொழி!

அவன் மட்டும் தான் தமிழோடு விளையாடுவானா? நாம கூடத் தமிழோடு விளையாடவே வந்தோம்! விளையாடலாமா? :)
இன்னிக்கி ராத்திரி நல்லா முழிச்சிக்கிட்டே ஆடுங்க! :))
விடைகள், வெள்ளி இரவு (நியூயார்க் நேரப்படி)!


1

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு!

திருவடிகளின் பெருமையைச் சொல்லும் இந்தக் குறள் எந்த அதிகாரம்?

1

அ) கடவுள் வாழ்த்து

ஆ) துறவு

இ) நீத்தார் பெருமை

ஈ) தவம்

2

பக்தி இலக்கியப் பெண் கவிஞர்கள் என்றால் உடனே நினைவுக்கு வருபவர்கள் இருவர் = ஆண்டாள், காரைக்கால் அம்மையார்!

12 ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருத்தி! 63 நாயன்மார்களில், மூன்று பேர் பெண்கள்! அதில் ஒருவர் காரைக்கால் அம்மையார்.

மற்ற இருவர் யார்? இந்த இருவரும் பாடல்கள் எதுவும் எழுதலை!

2

அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்

ஆ) மங்கையர்க்கரசியார்/ தண்டியடிகள்

இ) தண்டியடிகள்/ கவுந்தியடிகள்

ஈ) திலகவதியார்/ வாயிலார்

3

ஐம்பெரும் காப்பியத்துள் ஒன்றான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரத்துக்கும் முந்தையது என்பது ஆய்வு! விருத்தம் என்னும் பா வகைகள் இதன் சிறப்பு! கம்பனுக்கு முன்னோடி!

ஆன்மீகம் எப்பமே போர்! இல்வாழ்க்கை (அகப்பொருள்) பற்றி அது ஜாலியாவே பேசாது! - இப்படி ஒரு மதுரைக்கார புலவர் இடித்துக் காட்ட, ஒரு துறவி எழுதிய ரொமான்ஸ் கலந்த காவியம்! சீவகனுக்கு மொத்தம் எட்டு மனைவிகள் :)

இது எந்தச் சமய நூல்?/ஆசிரியர் யார்?

3

அ) பெளத்தம்/ சீத்தலைச் சாத்தனார்

ஆ) சமணம்/ பெயர் இல்லை (அனானி)

இ) பெளத்தம்/ நாகுதத்தனார்

ஈ) சமணம்/ திருத்தக்க தேவர்

4

குறிஞ்சி, முல்லை-ன்னு இன்னிக்கி பேச்சு வழக்கில் நாம ஆக்கிப்புட்டோம்! ஆனால் தொல்காப்பியர் ஏனோ, முல்லை நிலத்தையும் மாயோனையும் முதலில் சொல்லிவிட்டு, பின்னர் தான் குறிஞ்சியும் சேயோனும் சொல்கிறார்! - இது ஏன்? என்பது ஆய்வுக்குரியது!

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

அகத் திணைகளில் குறிஞ்சி = முருகனுக்கு, முல்லை = பெருமாளுக்கு! ஆனால் புறத்திணைத் துறைகளிலும் ஒரு துறையை மாயோனுக்கும், சேயோனுக்கும் ஒதுக்கறாரு தொல்காப்பியர்! மாயோனுக்கும் சேயோனுக்கும் என்னென்ன துறைகள்?

4

அ) கொற்றவை நிலை/கரந்தை

ஆ) பூவைநிலை/ வெறியாட்டு

இ) பூவைநிலை/ பிள்ளைநிலை

ஈ) குரவை/ வெறியாட்டு

5

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு

இந்தக் குறளில் ஒரு அவதாரம் குறிக்கப்படுவதாக, மணக்குடவர், ஜி.யு. போப் முதற்கொண்டு, டாக்டர் மு.வ வரை எல்லாரும் உரை எழுதினார்கள்!

ஆனால் இது அவதாரத்தைக் குறிக்கவில்லை என்பது தேவநேயப் பாவாணர் மற்றும் டாக்டர். கலைஞர் ஆகியோரின் அண்மைக் கால உரைகள்!

எந்த அவதாரம் இது? (நோ சாய்ஸ்)/ இந்தக் குறளின் அதிகாரம் இது?

5. வாமன-திரிவிக்ரம அவதாரம்

அ) ---/ ஊக்கமுடைமை

ஆ) ---/ஆள்வினை உடைமை

இ) ---/மடியின்மை

ஈ) ---/மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

6

சங்க காலத்துப் பழந் தமிழ் நூல் ஒன்றைக் கொண்டாந்து, பிற்காலத் தேவாரச் சைவத் திருமுறைகளில் தொகுத்து வைத்துள்ளார்கள்!

எந்த நூல்?/ யார் ஆசிரியர்?

6

அ) கலித் தொகை/பல ஆசிரியர்கள்

ஆ) திருக்குறள்/ திருவள்ளுவ நாயனார்

இ) குறிஞ்சிப்பாட்டு/ கபிலர்

ஈ) திருமுருகு ஆற்றுப்படை/ நக்கீரர்

7

சிலப்பதிகாரத்தில் சில பிரபலமான முருகன் ஆலயங்களும், பெருமாள் ஆலயங்களும் காட்டப்படுகின்றன!

இதில் ஒரே ஆற்றங்கறையில் இருக்கும் பெருமாள்/முருகன் ஆலயங்கள் எவையெவை?

7

அ) திருவேங்கடம்/ காளத்தி

ஆ) அழகர் கோயில்/ பழமுதிர் சோலை

இ) திருவரங்கம்/ சுவாமிமலை

ஈ) அழகர் கோயில்/ திருப்பரங்குன்றம்

8

கம்ப இராமாயண அரங்கேற்றம், கந்த புராண அரங்கேற்றம் - இரண்டிலுமே துவங்கும் போதே சிக்கல்! வேற யாரு? அந்நாளைய பதிவர்கள் - சில புலவர்கள் தான்! :)

கம்பர், இரணிய வதைப் படலம் என்று பிரகலாதன் கதையைச் சொன்னது மூல நூலில் இல்லை என்பது வாதம். கந்த புராணத்தின் ஆரம்பமே, திகட சக்கரம் என்று இலக்கணப் பிழை என்பது இன்னொரு வாதம்!

இந்த இரண்டு நூல்களும் கடைசியில் எங்கே அரங்கேறின?

8

அ) காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம்

ஆ) திருவரங்கம்/ குமரகோட்டம்

இ) திருமாலிருஞ் சோலை/ பழமுதிர் சோலை

ஈ) இராமேஸ்வரம்/ திருச்செந்தூர்

9

இராமனின் காவியம் = கம்பராமாயணம், நபிகளின் காவியம் = சீறாப்புராணம்!

இரண்டுமே வள்ளல்கள் உதவி செய்து தான் பின்னர் எழுதப்பட்டன! ஒரு வள்ளல் கம்பருக்கு உதவி, இன்னொரு வள்ளல் உமறுப் புலவருக்கு உதவி!

யார் அந்த இரு பெரும் நல்ல வள்ளல்கள்?

9

அ) குலோத்துங்க சோழன்/ படிக்காசுப் புலவர்

ஆ) சடையப்பர்/ குணங்குடி மஸ்தான் சாகிபு

இ) கபிலர்/ படிக்காசுப் புலவர்

ஈ) சீதக்காதி/ சடையப்பர்

10

இவர் பெரும் வைணவராக இருந்து, பின்னாளில் இயேசு பிரான் பால் ஈர்க்கப்பட்டு கிறித்துவராக மாறினார்! பெரும் கிறிஸ்துவ காவியமும் பாடினார்!

யார் இவர்? என்ன காவியம்?

10

அ) மாயூரம் வேத நாயகம் பிள்ளை/ பிரதாப முதலியார் சரித்திரம்

ஆ) வீரமா முனிவர்/ தேம்பாவணி

இ) எச். ஏ. கிருட்டிணப் பிள்ளை/ இரட்சணிய யாத்திரிகம்

ஈ) கண்ணதாசன்/ இயேசு காவியம்



இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) கடவுள் வாழ்த்து ஆ) துறவு இ) நீத்தார் பெருமை ஈ) தவம்

2. அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார் ஆ) மங்கையர்க்கரசியார்/ தண்டியடிகள் இ) தண்டியடிகள்/ கவுந்தியடிகள் ஈ) திலகவதியார்/ வாயிலார்

3 அ) பெளத்தம்/ சீத்தலைச் சாத்தனார் ஆ) சமணம்/ பெயர் இல்லை (அனானி) இ) பெளத்தம்/ நாகுதத்தனார் ஈ) சமணம்/ திருத்தக்க தேவர்
4 அ) கொற்றவை நிலை/கரந்தை ஆ) பூவைநிலை/ வெறியாட்டு இ) பூவைநிலை/ பிள்ளைநிலை ஈ) குரவை/ வெறியாட்டு
5 அ) ---/ ஊக்கமுடைமை ஆ) ---/ஆள்வினை உடைமை இ) ---/மடியின்மை ஈ) ---/மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
6 அ) கலித் தொகை/பல ஆசிரியர்கள் ஆ) திருக்குறள்/ திருவள்ளுவ நாயனார் இ) குறிஞ்சிப்பாட்டு/ கபிலர் ஈ) திருமுருகு ஆற்றுப்படை/ நக்கீரர்
7 அ) திருவேங்கடம்/ காளத்தி ஆ) அழகர் கோயில்/ பழமுதிர் சோலை இ) திருவரங்கம்/ சுவாமிமலை ஈ) அழகர் கோயில்/ திருப்பரங்குன்றம்
8 அ) காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் ஆ) திருவரங்கம்/ குமரகோட்டம் இ) திருமாலிருஞ் சோலை/ பழமுதிர் சோலை ஈ) இராமேஸ்வரம்/ திருச்செந்தூர்
9 அ) குலோத்துங்க சோழன்/ படிக்காசுப் புலவர் ஆ) சடையப்பர்/ குணங்குடி மஸ்தான் சாகிபு இ) கபிலர்/ படிக்காசுப் புலவர் ஈ) சீதக்காதி/ சடையப்பர்
10 அ) மாயூரம் வேத நாயகம் பிள்ளை/ பிரதாப முதலியார் சரித்திரம் ஆ) வீரமா முனிவர்/ தேம்பாவணி இ) எச். ஏ. கிருட்டிணப் பிள்ளை/ இரட்சணிய யாத்திரிகம் ஈ) கண்ணதாசன்/ இயேசு காவியம்

Tuesday, December 23, 2008

புதிரா? புனிதமா?? - திருப்பாவைக் குறுக்கெழுத்து விளையாட்டு!

Jan-02, 2009 03:33 AM EST
முடிவுகள், பரிசுகள் அறிவிச்சாச்சே! :)

பரிசு அறிவிப்பு பதிவு இங்கே! சரியான விடைகள் இதோ!


[crossword_answers.jpg]

இந்தப் போட்டியில் பலரும் ஆர்வங் காட்டிக் கலந்துக்கிட்டீங்க! ரொம்ப நன்றி!


மக்களே, ஃபார் ஏ சேஞ்ச்...ஒரு விளையாட்டு விளையாடுவோம் வாங்க! திருப்பாவை வெளக்கமாவே கேட்டுக்கிட்டு இருந்தா உபன்யாசம் மாதிரி-ல்ல ஆயிரும்? எப்பமே லெக்சர் டைப் ஆன்மீகம் நமக்கு மிக்சர் டைப் ஆயிரும்!
ஹிஹி! இரு வழிப் பங்கேற்பு (Two Way Participation) ரொம்ப முக்கியம்!
அப்போ தான் ஆன்மீக டேபிள் டென்னிஸ் ஜாலியாப் போவும்! வாங்க ஆட்டையப் போடலாமா?

இந்த விளையாட்டு - திருப்பாவைக் குறுக்கெழுத்து! Paavai Crosswords!

புதிர் எல்லாம் முக்கால்வாசி திருப்பாவையில் இருந்து தான்! நடுநடு-ல கொஞ்சம் ஜெனரல் தமிழ்க் கேள்வீஸ்!

ஆண்டாளுக்கு இந்த எக்-ஜாம், பன்-பட்டர்-ஜாம் எல்லாம் புடிக்காது! எப்பமே திறந்த புத்தகம்! ஓப்பன் புக் டெஸ்ட்!
* இது வரை மாதவிப் பந்தலில் வந்த பாவைப் பதிவுகளைப் பார்த்தும் எழுதலாம்! ஆனா இன்னும் பாவைப் பதிவுகள் முடியலை!
* அதுனால இந்தாங்க முழுப் புத்தகம்! பார்த்தே தேர்வு எழுதலாம்! :)

குறுக்கெழுத்தைப் பிரிண்ட் எல்லாம் எடுக்கத் தேவையில்ல! அப்படியே திரையிலேயே டைப் பண்ணிப் பாக்கலாம்! விடைகள் செட் ஆனவுடன், பின்னூட்டத்தில் இடுங்க!
புதிர்களுக்கான குறிப்பும், எழுத்து எண்ணிக்கையும் கீழே! கூடவே * மார்க்கில் அந்த அந்தத் திருப்பாவையின் நம்பர்! இத விட ஈசி இருக்க முடியுமா? அடிச்சி ஆடுங்க!

விடைகள் கிறிஸ்துமஸ் கழிச்சி சொல்லட்டுமா? குறுக்கெழுத்துப் பரிசும் உண்டு! :)
ரெடி, இஸ்டார்ட், மீஜிக்!


1 2 3
4
5 6
7
89 10
1112
1314
15
16
17 18



ACROSS - இடவலம் பிரதட்சிணம்
1. தாழாதே இந்த ஆயுதம்-சர மழை பெய்யும் (5) *4
3. இதுக்குச் செல்வம்-ன்னும் ஒரு அர்த்தம் இருக்கு! இதை மேய்த்துச் சாப்பிடும் குலத்தில் பிறந்தவன்!(4) *29
5. இதான் வீடு - இவருக்கும், நமக்கும்! கடைசி எழுத்து கட் ஆகியுள்ளது (4) *9
6. பொன்றச் சக்கரம் உதைத்தவன் என்ன போற்றி? (3) * 24
7. சிற்றாதே பேசாதே பணக்கார **! மனைவின்னும் கொள்ளலாமோ? (2) *11

8. பகாசுரன் ஒரு **! அதன் வாய் கீண்டான் (2) *13
9. நோன்புச் சாமான் - தமிழில் Explain (6) *26
11. இவன் கையில் மின்னல், சக்கரம் போல மின்னும் (6) *4
13. நோன்புச் சாமானை எல்லாம் இதன் மேல் படுத்திருப்பவன் தருவான் (5) *26
15. நால் திசை தீர்த்தங்களும் கொணர்ந்து நனி *** (3)

16. மார்கழி மாசம், நிலா நெறைஞ்ச நாளு(5) *1
17. இது அமெரிக்க, ஐரோப்பா, இந்தியா-ன்னு எல்லா இடத்திலும் பெய்யுது! தலை மேல வீழ, உன் வாசப்படி கடைப்பற்றி (2) *12
18. (வலமிருந்து இடம்) இது இருப்பார் போல் நாங்கள் எல்லாம் வந்து, உன் பள்ளிக்கட்டிற் கீழே, தலைப் பெய்தோம் (4) *22


DOWN - மேல்கீழ் பிரதட்சிணம்
1. இதை வைத்துக் கொண்டு பல்லாண்டு இசைப்பாரே! (8) *26
2. இதன் பின்னாலேயே போவோம்! கானகம் சேர்ந்து, உண்போம் (5) *28
4. கூர் வேல், கொடுமையான வேலை செய்பவனின் குமரன் (6) *1
6. பறவை அரசன், பட்சி ராஜன், கருடன் (6) *6
10. ஓசை படுத்த தயிர் கடையும் சத்தம் கேக்கலையோ? (5) *7

12. இவனாய் நின்று, கண்ணனோட அப்பா, கோயில் காப்போனே (5) *16
14. கடிதத்தின் வடமொழிச் சொல்(4)
15. வேங்கடவா! நாங்கடவா வண்ணமே என்ன? (3)
16. சால உறு தவ ** கூர் கழி (2)


இது விடைகளைக் கடேசியா காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளுக்கு ஈசியா இருக்கும்! :)
ACROSS - இடவலம்
1.
3.
5.
6.
7.

8.
9.
11.
13.
15.

16.
17.
18.

DOWN - மேல்கீழ்
1.
2.
4.
6.
10.

12.
14.
15.
16.